/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அகரம் கிராமத்தில் 28ம் தேதி மனுநீதி நாள் முகாம்அகரம் கிராமத்தில் 28ம் தேதி மனுநீதி நாள் முகாம்
அகரம் கிராமத்தில் 28ம் தேதி மனுநீதி நாள் முகாம்
அகரம் கிராமத்தில் 28ம் தேதி மனுநீதி நாள் முகாம்
அகரம் கிராமத்தில் 28ம் தேதி மனுநீதி நாள் முகாம்
ADDED : செப் 04, 2011 11:13 PM
கடலூர் : சிதம்பரம் தாலுகா அகரம் கிராமத்தில் வரும் 28ம் தேதி டி.ஆர்.ஓ., தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடக்கிறது.
இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்திலிருந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்த முகாமையொட்டி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற வசதியாக அகரம் கிராமத்தில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகத்தில் தபால் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 7ம் தேதி அனைத்து துறை அதிகாரிகள் கிராமத்தில் முகாமிட்டு பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற உள்ளனர். இந்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரத்தை மனுநீதி நாளன்று தெரிவிக்கப்படும். மேலும், மனுநீதி நாளன்று பொதுமக்கள் பயன் பெறும் வகையில் மருத்துவ முகாம், விவசாய திட்டங்களின் செயலாக்கம், ஊட்டச்சத்து மற்றும் சிறுசேமிப்பு துறைகளின் கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.