/உள்ளூர் செய்திகள்/கரூர்/செக் மோசடி வழக்கில்அ.தி.மு.க., ஒ.செ.,க்குகோர்ட் "பிடிவாரண்ட்'செக் மோசடி வழக்கில்அ.தி.மு.க., ஒ.செ.,க்குகோர்ட் "பிடிவாரண்ட்'
செக் மோசடி வழக்கில்அ.தி.மு.க., ஒ.செ.,க்குகோர்ட் "பிடிவாரண்ட்'
செக் மோசடி வழக்கில்அ.தி.மு.க., ஒ.செ.,க்குகோர்ட் "பிடிவாரண்ட்'
செக் மோசடி வழக்கில்அ.தி.மு.க., ஒ.செ.,க்குகோர்ட் "பிடிவாரண்ட்'
ADDED : ஜூலை 11, 2011 03:02 AM
குளித்தலை: செக் மோசடி வழக்கில் குளித்தலை அ.தி.மு.க., ஒன்றிய
செயலாளருக்குகோ ர்ட்டில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.குளித்தலை
தண்ணீர் பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம் (45) குளித்தலை ஒன்றிய
அ.தி.மு.க., செயலாளராக உள்ளார்.
இவர் குளித்தலை பெரியார் நகரை சேர்ந்த அரசு
பள்ளி ஆசிரியர் உலகநாதன் (48) என்பவரிடம் கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர்
மாதம் 45 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.அதற்கு பதிலாக குளித்தலை
ஸ்டேட் வங்கி செக்கை, உலகநாதனிடம் விநாயகம் கொடுத்துள்ளார். ஆனால்,
வங்கியில் பணம் இல்லாமல் 'செக்' திரும்பி வந்து விட்டது. இதையடுத்து
உலகநாதன், குளித்தலை இரண்டாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு
தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்கு ஆஜராக இரண்டு முறை கோர்ட்டில் இருந்து,
விநாயகத்துக்கு சம்மன் அனுப்பியும் அவர் பெற்றுக்கொள்ளவில்லை.இதையடுத்து
விநாயகத்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மாஜிஸ்திரேட் தனசேகரன்
உத்தரவிட்டார்.