ADDED : ஜூலை 23, 2011 01:01 AM
வடமதுரை : எரியோடு மூக்கையகவுண்டனூரை சேர்ந்த பால்ராஜ் மகன் சதீஷ் (11).
ஆறாம் வகுப்பு படித்தார். இவரது தாய் லட்சுமி கடந்தாண்டு இறந்தார். அப்போதிருந்தே சதீஷ் மன விரக்தியுடன் இருந்தார். முருங்கை செடிகளுக்கு மருந்து அடித்தபோது, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர்.