UPDATED : ஜூலை 24, 2011 02:33 AM
ADDED : ஜூலை 24, 2011 02:27 AM
மாமல்லபுரம்: தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்
கல்லூரியில், கணினி கருத்தரங்கம் நடந்தது.கல்லூரி முதல்வர் பொன்ராஜ் தலைமை
தாங்கினார்.
இன்போசிஸ் நிறுவனத்தின், துணைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி ராமசாமி,
'கிளைவுட் கம்ப்யூட்டர்' என்ற தலைப்பில் கணினித் துறையின் வளர்ச்சி
மற்றும் பயன்பாடுகள் குறித்து விளக்கினார். துறைத் தலைவர் துளசி, கல்லூரி
துணைச் செயலர் விஜயராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் பொன்னம்பலம் உட்பட பலர்
கலந்து கொண்டனர்.


