Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/தேசிய லங்காடி விளையாட்டு போட்டி; மாணவிகள் சாதனை

தேசிய லங்காடி விளையாட்டு போட்டி; மாணவிகள் சாதனை

தேசிய லங்காடி விளையாட்டு போட்டி; மாணவிகள் சாதனை

தேசிய லங்காடி விளையாட்டு போட்டி; மாணவிகள் சாதனை

ADDED : ஜூலை 13, 2011 02:28 AM


Google News

கரூர்: பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 26 ம் தேதி முதல் 26 ம் தேதி வரை லங்காடி (நொண்டி அடித்து தொடுதல்) விளையாட்டு போட்டி நடந்தது.

அதில் தமிழக அணி சார்பில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த மணிவேல், ரிச்சர்ட் ரெஜினால், சரண்யா, கிருத்திகா, கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய அளவில் நடந்த இறுதி போட்டியில் தமிழக அணி ஆண்கள் பிரிவு இரண்டாமிடமும், பெண்கள் அணி மூன்றாமிடமும் பெற்றனர். கரூர் மாவட்ட கூடைப்பந்து சங்க தலைவர் பாஸ்கர், மாவட்ட லங்காடி விளையாட்டு சங்க மாவட்ட தலைவர் ரவி, பெருந்தலைவர் பாலசுப்ரமணியன், துணை தலைவர் முகமது கமால்தீன், துணை தலைவர்கள் பெரியசாமில சுரேஷ், செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் தமிழக அணியில் இடம் பெற்ற கரூர் மாவட்டத்தை சேர்ந்த லங்காடி அணி வீரர்களை பாராட்டினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us