ADDED : ஜூலை 13, 2011 01:34 AM
சிறுபாக்கம் : நல்லூர் ஒன்றிய தி.மு.க., சார்பில் உயர்நிலை செயல் விளக்க
தெருமுனைக் கூட்டம் வேப்பூர் மற்றும் நல்லூரில் நடந்தது.
நல்லூர் ஒன்றிய
தி.மு.க., செயலர் பாவாடை கோவிந்தசாமி தலைமைத் தாங்கினார். சேர்மன்
ஜெயசித்ரா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மதியழகன் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் காதர் வரவேற்றார். தலைமைக் கழக பேச்சாளர் ஈரோடு
இறைவன் பேசினார். மாவட்ட பிரதிநிதிகள் ஜெயராமன், சுகுணா, மாவட்ட மகளிரணி
பொருளாளர் ராஜகுமாரி, கணேசன், ஒன்றிய துணைச் செயலர்கள் அண்ணாதுரை, துரை
கருப்புசாமி, ஊராட்சி தலைவர்கள் கருணாநிதி, பாலசுப்ரமணியன், கவுன்சிலர்கள்
சக்தி வினாயகம், மோகன்ராஜ், வெங்கடாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.