/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/திருக்கோவிலூர் வார்டு தேர்தலில் பா.ம.க., வேட்பாளர் 2 பேர் வாபஸ்திருக்கோவிலூர் வார்டு தேர்தலில் பா.ம.க., வேட்பாளர் 2 பேர் வாபஸ்
திருக்கோவிலூர் வார்டு தேர்தலில் பா.ம.க., வேட்பாளர் 2 பேர் வாபஸ்
திருக்கோவிலூர் வார்டு தேர்தலில் பா.ம.க., வேட்பாளர் 2 பேர் வாபஸ்
திருக்கோவிலூர் வார்டு தேர்தலில் பா.ம.க., வேட்பாளர் 2 பேர் வாபஸ்
ADDED : அக் 06, 2011 01:09 AM
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு 6 பேரும்,
வார்டு கவுன்சிலர் பதவிக்கு 93 பேரும் போட்டியிடுகின்றனர்.
பேரூராட்சி 2
மற்றும் 4 வது வார்டில் போட்டியிட்ட பா.ம.க.,வினர் திடீரென வாபஸ் பெற்றனர்
திருக்கோவிலூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க.,- அ.தி. மு.க.,-
காங்.,- பா.ம.க.,- தே.மு.தி.க., மற்றும் இரண்டுகள் சுயேச்சைகள் உட்பட 7
பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் ஒரு சுயேச்சை வேட்பாளர் மனுவை
திரும்ப பெற்றதால், இறுதி போட்டியில் 6 பேர் களத்தில் உள்ளனர். இவர்களில்
தி.மு.க.,- அ.தி.மு.க.,- காங்., கட்சி வேட்பாளர்களிடையே கடும் போட்டி
ஏற்பட்டுள்ளது. அதே நேரத் தில் பா.ம.க.,-தே.மு.தி.க., வேட்பாளர்கள் கணிசமான
ஓட்டுகளை பெற வாய்ப்புள்ளதால் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள்
கலக்கத்தில் உள்ளனர். பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 93 பேர்
போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் 16வது வார்டில் அதிகபட்சமாக 10 பேரும்,
ஐந்தாவது வார்டில் 8 பேரும் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு வார்டிலும் 5
முதல் 6 வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். இதற்கிடையே 2 மற்றும் 4
வது வார்டில் போட்டியிட்ட பா.ம.க., வேட்பாளர்கள் திடீரென மனுவை வாபஸ்
பெற்றுவிட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.


