ADDED : செப் 16, 2011 10:01 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் பொள்ளாச்சி - கோவை ரோடு போடு புதுப்பிக்க கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கோவை ரோடு மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.
இந்த ஆண்டு புதிய ரோடுகள் போட நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு முடிக்கப்பட்டு பணிகளின் தொடர்ச்சியாக அரசு மருத்துவமனை ரோட்டில் இருந்து வடக்கிபாளையம் வரை 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரோடு புதுப்பிக்கும் பணிகள் துவங்க மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. மேலதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் வழங்கப்பட்ட பிறகு பணிகள் துவங்கும், என்றனர்.