மன்னார் வளைகுடாவில் 100 கடல் கன்னிகள்
மன்னார் வளைகுடாவில் 100 கடல் கன்னிகள்
மன்னார் வளைகுடாவில் 100 கடல் கன்னிகள்

ராமநாதபுரம் : மன்னார் வளைகுடாவில் 100 கடல் கன்னிகள் இருப்பதாக, அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கடற்பசு சிறிய குழுக்களாக காணப்படும். நுரையீரல் கொண்டு வளிமண்டல வாயுவை சுவாசிப்பதால், அவ்வப்பொழுது கடலின் மேற்புறத்துக்கு வரும். யானை போன்று இவற்றின் இனப்பெருக்கம் மெதுவாகவே நடைபெறும். இரு பேறுகாலத்துக்குட்பட்ட இடைவெளி மூன்று ஆண்டுள். ஒரு முறை ஒரு கன்று தான் ஈனும். இவற்றின் மாமிசம் பல மருத்துவ குணங்களை உள்ளடக்கியது என்பதால், இவற்றை மறைமுகமாகவும், நேரடியாகவும் வேட்டையாடி அழித்து வருகின்றனர். மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் கடற்தாவரங்கள் அழிந்து வருவதால், கடல் பசுக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மன்னார் வளைகுடா பகுதியில் அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 100 கடல் பசுக்களே உள்ளன. கடல்பசுக்களை வேட்டையாடுவோருக்கு மூன்று முதல் ஏழு ஆண்டு வரை சிறை தண்டனையும், 25 ஆயிரம் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் வகை இருந்தாலும், இதை பிடிப்போர் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகத்தினர் இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.