தெலுங்கானாவில் 7-வது நாளாக தொடர் போராட்டம்
தெலுங்கானாவில் 7-வது நாளாக தொடர் போராட்டம்
தெலுங்கானாவில் 7-வது நாளாக தொடர் போராட்டம்
ADDED : செப் 18, 2011 04:28 PM
ஐதராபாத்: தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி 6-து நாட்களாக போராட்டம் நீடிக்கிறது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் தெலுங்கானா தனிமாநில கோரிக்கையை வலியுறுத்தி கடந்த திங்களன்று அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தை துவக்கினர். இந்நிலையில் தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்களும் , ஆந்திராவின் சிங்கரேனி நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றும் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் நிலக்கரி வெட்டி எடுப்பதில் தேக்கம் ஏற்பட்டுள்ளதால் அனல்மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரிக்கு கடும் தட்டுபாடு நிலவுகிறது. இதனால் 400 மெகாவாட் மின் உற்பத்தி குறைந்துள்ளது.