ADDED : ஆக 25, 2011 11:53 PM
தேனி : தேனி அல்லிநகரம் கிணற்றுத்தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (35).
ஆக., 17ல் இவர், பொம்மையகவுண்டன்பட்டி விநாயகர் கோயில் அருகில் நிறுத்தி வைத்திருந்த டிராக்டர் காணாமல் போனது. அல்லிநகரம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த வாகன சோதனையின் போது, திருடு போன டிராக்டர் பிடிபட்டது. போலீசார் சுக்குவாடன்பட்டியை சேர்ந்த பிச்சைமணி (28), நிலக்கோட்டை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராஜ்குமார் (35) ஆகியோரை கைது செய்தனர். திருடு போன டிராக்டர் மீட்கப்பட்டது.


