பழநி:பழநியில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு
சார்பில், உண்ணாவிரதம் நடந்தது.
மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெய்ராம்பாண்டியன்
தலைமை வகித்தார். வீரதேவேந்திரர் சங்க பொதுச்செயலாளர் கணேசபாண்டியன்
வரவேற்றார். பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி ஆறுமுகம், ஒன்றிய தலைவர்
நாகேந்திரன் முன்னிலை வகித்தனர். பரமக்குடி சம்பவத்தில் பலியானர்களின்
குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தப்பட்டது. தமிழக மக்கள்
முன்னேற்றக் கழக ஒன்றிய தலைவர் மணிகண்டன், நகர தலைவர் பாண்டியன் உட்பட பலர்
கலந்து கொண்டனர்.


