ADDED : செப் 25, 2011 03:27 AM
மதுரை:மதுரை பாத்திமா கல்லூரி மனையியல் துறை மற்றும் உணவு பயோ டெக்னாலஜி துறை சார்பில், 'நியூட்ரிபெஸ்ட்' விழா நடந்தது.
முதல்வர் ஜோஸ்பின் நிர்மலா மேரி துவக்கி வைத்தார். சைகைமொழியில்
விளக்குதல், பெயின்டிங், ரங்கோலி, ஆரோக்கிய சமையல், சத்துணவு வினாடிவினா,
குழுநடனம், 'மிஸ் நியூட்ரிபெஸ்ட்' போட்டிகள் நடந்தன. 14 கல்லூரி மாணவிகள்
பங்கேற்றனர். விருதுநகர் வி.வி.வி.,
கல்லூரி மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனர். மனையியல் துறைத் தலைவி வசந்தா ஏற்பாடுகளைச் செய்தார்.


