/உள்ளூர் செய்திகள்/சென்னை/தீபாவளிக்கு கூடுதல் பஸ்களை இயக்க எதிர்பார்ப்பு : ட்முன்பதிவு செய்யாத பயணிகள் விருப்பம்தீபாவளிக்கு கூடுதல் பஸ்களை இயக்க எதிர்பார்ப்பு : ட்முன்பதிவு செய்யாத பயணிகள் விருப்பம்
தீபாவளிக்கு கூடுதல் பஸ்களை இயக்க எதிர்பார்ப்பு : ட்முன்பதிவு செய்யாத பயணிகள் விருப்பம்
தீபாவளிக்கு கூடுதல் பஸ்களை இயக்க எதிர்பார்ப்பு : ட்முன்பதிவு செய்யாத பயணிகள் விருப்பம்
தீபாவளிக்கு கூடுதல் பஸ்களை இயக்க எதிர்பார்ப்பு : ட்முன்பதிவு செய்யாத பயணிகள் விருப்பம்
தீபாவளிப் பண்டிகைக்கு, அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்பவர்களுக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ள நிலையில், முன்பதிவு செய்யாத பயணிகளின் தீபாவளிப் பயணத்திற்கு, அரசு போக்குவரத்துக் கழகங்கள் போதிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சிறப்பு பஸ்கள் தேவை: கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் அனேக பகுதிகளுக்கும், மற்ற சில மாநிலங்களுக்கும், 456 பஸ்கள் இயக்கப்படும் நிலையில், தற்போது கூடுதல் சிறப்பு பஸ்களின் சர்வீஸ் தேவைப்படுகிறது. இதற்காக, முன்கூட்டியே முறையான திட்டமிடல் வேண்டும். சிறப்பு பஸ்களை கூடுதலாக இயக்குவதன் மூலமாக மட்டுமே, பயணிகளின் கூட்டத்தை ஓரளவு சமாளிக்கலாம். இதே போல, தீபாவளி பண்டிகையின் போது, அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு உதவியாக, விழுப்புரம் மற்றும் கும்பகோணம் கோட்டங்களில் இருந்து, நூற்றுக்கணக்கான சிறப்பு பஸ்களை இயக்குவர். அவர்கள் தரப்பிலும் சிறப்பு பஸ்களை அதிகரிக்கும் பட்சத்தில் நிலைமையை, மேலும் ஓரளவு சமாளிக்கலாம். இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ''கடந்த தீபாவளிப் பண்டிகையின் போது 100 சிறப்பு பஸ்களை இயக்கியும், நிலைமையை சமாளிக்க முடியவில்லை. இந்த முறை குறைந்தபட்சம் 200 சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக, தமிழகத்தில், 23 டிப்போக்களில் இருந்தும் பஸ்களை பெற உள்ளோம்.
பஸ்சில் கொண்டாடிய தீபாவளி : அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்து கொண்டு, தங்களது பயணத்தை உறுதிப்படுத்திக் கொண்ட பயணிகள், ஆண்டுதோறும் சிக்கலுக்கு உள்ளாகின்றனர். அவர்களுக்கான பஸ், குறித்த நேரத்திற்கு பஸ் நிலையத்திற்கு வராததும், புறப்படாததும் தான் காரணம். இது குறித்து, கடந்த தீபாவளிப் பண்டிகையை பஸ்சிலேயே கொண்டாடிய நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார், 'கடந்த ஆண்டு தீபாவளி முந்தைய நாள், ரிசர்வேசன் டிக்கெட்டுடன் கோயம்பேடு பஸ் நிலையத்தில் காத்திருந்தேன். இரவு 9 மணிக்கு புறப்பட வேண்டிய எங்களது பஸ், பஸ் நிலையத்திற்குள் வந்ததே 12 மணிக்கு தான். பின்னர், பஸ் நிலைய நெரிசலில் நிலையத்தை விட்டு வெளியேறவே, ஒரு மணி நேரம் ஆனது. பல போராட்டங்களுக்குப் பின் புறப்பட்ட பஸ், பாண்டிச்சேரியை அடைவதற்குள்ளே பொழுது விடிந்து விட்டது. பஸ்சிலேயே தீபாவளி கொண்டாட வேண்டி வந்தது. அதே நேரத்தில், முன்பதிவு செய்யாத என் நண்பன், சிறப்பு பஸ்சில் குறித்த நேரத்திற்கு சொந்த ஊர் சென்று விட்டான்'' என ஆதங்கப்பட்டார்.
- எஸ்.விவேக் -


