/உள்ளூர் செய்திகள்/தேனி/உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து மாலையில் போலீசார் ரோந்துஉள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து மாலையில் போலீசார் ரோந்து
உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து மாலையில் போலீசார் ரோந்து
உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து மாலையில் போலீசார் ரோந்து
உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து மாலையில் போலீசார் ரோந்து
ADDED : அக் 01, 2011 09:54 PM
தேனி : உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் களை கட்டி உள்ள நிலையில் பிரச்னை ஏற்படக்கூடாது என்பதற்காக போலீசார் மாலையில் ரோந்து சுற்றி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் களைகட்டி உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்துள்ள குட்டித்தலைவர்கள் தனது ஆதரவாளர்களுடன் பிரசாரம் செய்து வருகின்றனர். பிரசாரம் மும்முரமாக நடந்து வரும் நிலையில் பிரச்னைகளை தவிர்க்க, போலீசாரும் மாலையில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பிரவீன்குமார் எஸ்.பி., அறிவுறுத்தி உள் ளார். மூன்று போலீசார் வீதம் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு மாலை நேர ரோந்து நடந்து வருகிறது.


