Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமல் மக்கள் குறை தீர்க்கும் கூட்டங்களுக்கு "தடை'

உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமல் மக்கள் குறை தீர்க்கும் கூட்டங்களுக்கு "தடை'

உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமல் மக்கள் குறை தீர்க்கும் கூட்டங்களுக்கு "தடை'

உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமல் மக்கள் குறை தீர்க்கும் கூட்டங்களுக்கு "தடை'

ADDED : செப் 25, 2011 12:19 AM


Google News

திருநெல்வேலி : தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் கலெக்டர் அலுவலகங்களில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டங்கள் நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தமிழக தேர்தல் ஆணையம் தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை கடந்த 21ம் தேதி அறிவித்ததை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. எனவே, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் போன்ற கூட்டங்களை நடத்த கூடாது என ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எனவே, நெல்லை மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும் நாளான வரும் அக்டோபர் மாதம் 23ம் தேதி வரை நடக்காது. தேர்தல் நடத்தை விதிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று கலெக்டர் செல்வராஜ் தெரிவித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us