ADDED : செப் 21, 2011 01:04 AM
தூத்துக்குடி:குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஓசோன் தினம்
கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை
வகித்தார். வேதியியல் முதுகலை பட்டதாரி ஆசிரியை சுவேதா ஓசோன் படலம்
குறித்து பேசினார். தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் ரவிகாந்த் மாணவ,
மாணவிகளுக்கு வினாடி, வினா நிகழ்ச்சியை நடத்தினார். வெற்றிபெற்ற மாணவ,
மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அறிவியல் ஆசிரியர் மனோகர்
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆசிரியை ஜூலியட் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை என்.சி.சி., மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.