/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அரசு மருத்துவமனையில் பாதாள சாக்கடை பணிஅரசு மருத்துவமனையில் பாதாள சாக்கடை பணி
அரசு மருத்துவமனையில் பாதாள சாக்கடை பணி
அரசு மருத்துவமனையில் பாதாள சாக்கடை பணி
அரசு மருத்துவமனையில் பாதாள சாக்கடை பணி
ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் கிடப்பில் போடப்பட்ட பாதாள சாக்கடை திட்டப்பணி, மீண்டும் துவங்கியது.
ஆரம்பத்தில் வேகமாக நடந்த பணிகள், கிடப்பில் போடப்பட்டது. இதுபற்றி, 'காலைக்கதிர்' நாளிதழில் செய்தி வெளியானது. தற்போது, நீண்ட இழுபறிக்கு பின் மீண்டும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளது. பல்வேறு கட்டிடங்களில் குழாய் முலமாக வரும் கழிவுநீரை தேக்க, மூன்று பெரிய தொட்டிகள் கட்டும் பணி ஜரூராக நடக்கிறது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் ஈரோடு உதவி செயற்பொறியாளர் கூறியதாவது: மருத்துவமனை கழிவுநீரை பாதாள சாக்கடை குழாய் மூலமாக எடுத்து வந்து, தலா நான்கு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மூன்று சுத்திகரிப்பு தொட்டிகளில் நிரப்பி, கழிவு நீரின் வீரியத்தன்மையை குறைத்து, கழிவுநீரில் இருந்து திட கழிவுப் பொருளை பிரித்து, அதன் பின், மாநகராட்சி சாக்கடையில் விடப்படும். பிரிக்கப்பட்ட திடக்கழிவை காயவைத்து, விவசாய உரமாக வழங்கப்படும். தற்போது, மூன்று தொட்டிகள் அமைக்கும் பணி விரைவாக நடந்து வருகிறது. அதன் பின், கருவிகள் பொருத்துதல் மற்றும் எலக்ட்ரிகல் பிரிவு வேலை செய்யப்படும். 2012 ஜனவரிக்குள் பணிகள் முடிக்கப்படும், என்றார்.


