Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/மனித உரிமைகள் விழிப்புணர்வு முகாம்

மனித உரிமைகள் விழிப்புணர்வு முகாம்

மனித உரிமைகள் விழிப்புணர்வு முகாம்

மனித உரிமைகள் விழிப்புணர்வு முகாம்

ADDED : செப் 05, 2011 12:24 AM


Google News

தூத்துக்குடி : உடன்குடி யூனியனில் மக்கள் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் தேநீர் விருந்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.

தமிழ்நாடு சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஏடிஜிபி., லெட்சுமிபிரசாத் உத்தரவுப்படி மக்கள் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் தேநீர் விருந்து விழிப்புணர்வு முகாம் உடன்குடி யூனியனில் உள்ள மணப்பாடு, சிறுநாடார் குடியிருப்பு, ஆதியாகுறிச்சி, லெட்சுமிபுரம், வெங்கட்ராமானுஜபுரம், குலசேகரபட்டணம், செட்டியாபத்து, மாதவன்குறிச்சி ஆகிய இடங்களில் நடந்தது. முகாமிற்கு சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரரேசன் தலைமை வகித்தார். புள்ளியியல் ஆய்வாளர் சுரேஷ், உதவி ஆய்வாளர் முருகன், செல்லையா மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். ஆதிதிராவிட மக்கள் மற்றும் பிற சமுதாய மக்களிடையே தொடர்ந்து நல்லிணக்கம் ஏற்படுவதற்காகவும், இரட்டை குவளை முறை இல்லாமையை தொடர்ந்து கடைபிடிக்கவும் முகாமில் வலியுறுத்தப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட ஆதிதிராவிட சமுதாய மக்களுடன் பிற சமுதாய மக்களும் சமமாக அமர்ந்து தேநீர் அருந்தினர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us