ADDED : ஆக 26, 2011 12:47 AM
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான வளைபந்து லீக் விளையாட்டு போட்டிகள் நடந்தது.
விளையாட்டுபோட்டிகளில் அரசு மேல்நிலைப்பள்ளி அணி, அரசு உயர்நிலைப்பள்ளி அணி உட்பட ஐந்து அணிகளை சேர்ந்த 80 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இதில் ரோவர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் முதல் இடமும், ரோவர் கலைக்கல்லூரி இரண்டாமிடமும் பெற்றனர். பரிசளிப்பு விழாவில் வெற்றிப்பெற்ற அணிகளுக்கு கலெக்டர் (பொறுப்பு) சுப்ரமணியன் பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினார். விழாவில், மாவட்ட விளையாட்டு அலுவலர் தர்மராஜ், கைப்பந்து பயிற்றுநர் சிவரஞ்சன் உட்பட பலர் பங்கேற்றனர்.