ADDED : ஆக 21, 2011 01:22 AM
விழுப்புரம்:விழுப்புரம் அருகேயுள்ள காணை குப்பம் வரதராஜபெருமாள் கோவிலில்
இன்று கோகுலாஷ்டமி திருவிழா நடக்கிறது.விழுப்புரம் அடுத்த காணை குப்பம்
வரதராஜ பெருமாள் கோவிலில் கோகுலாஷ்டமி திரு விழா நடக்கிறது.
காலை 8
மணியளவில் சிறப்பு திருமஞ்சனம்,பகல் 1 மணியளவில் ஆலயத்தில் அன்னதானம்,பகல் 2
மணியளவில் சுவாமி திருவீதியுலா,சிறப்பு பஜனை, உறியடி நிகழ்ச்சிகள்
நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினர்
செய்துவருகின்றனர்.


