ADDED : ஆக 15, 2011 12:49 AM
தர்மபுரி: தர்மபுரியில் பாரதிய ஜனதா கட்சி புதிய நிர்வாகிகள் நியமனம் நடந்தது.மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார்.
மாநில செயற்குழு உறுப்பினர் ரங்கராஜன், மாஜி மாவட்ட தலைவர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொது செயலாளர் ரமேஷ், கோட்ட பொறுப்பாளர் சிவராம், அமைப்பு செயலாளர் கதிர் முருகன் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். மாவட்ட துணை தலைவர்களாக மாணிக்கம், ராஜேந்திரன், கவிதா, ஜோசப், மாவட்ட பொது செயலாளராக சரவணன், மாவட்ட செயலாளர்களாக குமரவேல், சங்கர், மஞ்சுநாதன் மற்றும் பொருளாளராக அனந்தகிருஷ்ணன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.


