விலங்குகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான நிதி உதவி 3 லட்சம் ரூபாயாக அதிகரிப்பு
விலங்குகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான நிதி உதவி 3 லட்சம் ரூபாயாக அதிகரிப்பு
விலங்குகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான நிதி உதவி 3 லட்சம் ரூபாயாக அதிகரிப்பு
சென்னை : விலங்குகளால் ஏற்படும், மனித உயிரிழப்புகளுக்கான நிதியுதவியை, மூன்று லட்சம் ரூபாயாக உயர்த்தி, தமிழக அரசு அறிவித்துள்ளது.
மனித உயிரிழப்பிற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை, ஒன்றரை லட்சம் ரூபாயிலிருந்து, 3 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். சுற்றுச்சூழலின் சமநிலையை நிலை நிறுத்த, நாம் சார்ந்திருக்கும் உயிர்ச்சூழல் அமைப்புகளை, முறையாக பாதுகாப்பது அவசியமாகிறது. பெருகி வரும் சதுப்பு நிலங்களையும் அதைச் சார்ந்த உயிரினங்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை சீராக்கி பாதுகாக்க. விரிவானத் திட்டம் ஒன்றை அரசு செயல்படுத்தும்.
முதன் முறையாகவோ அல்லது மறுசுழற்சி மூலமோ தயாரிக்கப்படும், 60 மைக்ரானுக்குத் குறைவான பாலிதீன் பைகளுக்கு, தடை விதிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. பிளாஸ்டிக் கழிவுகளைத் திரட்டி, சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்துவதையும், அதனை முறையாக அகற்றுவதையும், மாநிலம் தழுவிய ஒரு மக்கள் இயக்கமாக மேற்கொள்ள, 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக, சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி, சோதனை அடிப்படையில், சாலைகள் அமைப்பதற்காக, 50 கோடி ரூபாய் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சோதனை முறையில் சாலைகள் அமைக்க, இத்தகைய பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு, இந்த நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.