/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பொள்ளாச்சி-கோவை ரோட்டில் "பேட்ஜ் ஒர்க்' செய்ய கோரிக்கைபொள்ளாச்சி-கோவை ரோட்டில் "பேட்ஜ் ஒர்க்' செய்ய கோரிக்கை
பொள்ளாச்சி-கோவை ரோட்டில் "பேட்ஜ் ஒர்க்' செய்ய கோரிக்கை
பொள்ளாச்சி-கோவை ரோட்டில் "பேட்ஜ் ஒர்க்' செய்ய கோரிக்கை
பொள்ளாச்சி-கோவை ரோட்டில் "பேட்ஜ் ஒர்க்' செய்ய கோரிக்கை
ADDED : ஜூலை 31, 2011 11:34 PM
கிணத்துக்கடவு : பொள்ளாச்சி - கோவை செல்லும் மெயின்ரோட்டில் மீண்டும்
குழிகள் அதிகரித்துள்ளதால், வாகன விபத்துகள் அதிகரித்துள்ளன.
இதை தடுக்க
தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மீண்டும் 'பேட்ஜ் ஒர்க்' செய்ய வேண்டும்.
பொள்ளாச்சி-கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலை ரோடு புதுப்பித்து பல ஆண்டுகள்
ஆகிவிட்டதால், ரோட்டில் குழிகள் அதிகரித்துள்ளன. இவ்வழியாக பஸ், லாரி,
டெம்போ, கார், டூ-வீலர்கள் அதிகளவில் செல்கின்றன. அப்போது, ரோட்டில் உள்ள
குழிகளில் சிக்கி வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. இதனை தடுக்க தேசிய
நெடுஞ்சாலைத்துறையினர் குழிகளுக்கு 'பேட்ஜ் ஒர்க்' செய்ய வேண்டும் என
பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனர்.