/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க கோரிக்கைபணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க கோரிக்கை
பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க கோரிக்கை
பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க கோரிக்கை
பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க கோரிக்கை
ADDED : ஜூலை 11, 2011 09:39 PM
திருப்பூர் : 'பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும்,' என,
திருப்பூரில் நடந்த சாலை பணியாளர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்,
திருப்பூரில் நடந்தது; மாவட்ட அமைப்பாளர் சுப்ரமணி தலைமை வகித்தார். துணை
அமைப்பாளர் அம்மாசை வரவேற்றார். மாநில தலைவர் சண்முகராஜா, பொது செயலாளர்
வெங்கிடு பேசினர். கூட்டத்தில், 'புதிய அரசை பாராட்டும் வகையில், செப்.,
7ல் சென்னையில் நடக்கும் பேரணியில் திரளாக பங்கேற்பது; 41 மாத பணி நீக்க
காலத்தை, பணி காலமாக அறிவிக்க வலியுறுத்துதல்; வேலை நீக்க காலத்தில்
கூட்டுறவு கடனுக்கு போடப்பட்ட வட்டி, அபராத வட்டியை தள்ளுபடி செய்ய
வேண்டும்; இறந்த சாலை பணியாளர் குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்குவதில்,
விடுபட்ட குடும்பங்களுக்கு வேலை வழங்க வேண்டும்,' என தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன. மாவட்ட நிதி காப்பாளர் கோபால் நன்றி கூறினார்.