Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

168
அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.
குறள் விளக்கம் :

மு.வ : பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.


சாலமன் பாப்பையா : பொறாமை எனப்படும் ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும்

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us