ADDED : மே 16, 2026 03:25 AM
- நமது நிருபர் -
l பாலில் ஒரு துளி சோடா உப்பை சேர்த்து காய்ச்சினால், பால் திரிந்து போகாது.
l கோதுமை மாவை கரைத்து, அதில் ஒரு கிளாஸ் மோர் ஊற்றினால், தோசை சுவையாக இருக்கும்.
l துவையல் அரைக்கும் போது துளசி இலையை சேர்த்து அரைத்தால் சுவை கூடும். சளி பிடிக்காது.
l இஞ்சி தோலை லேசாக சீவி தயிரில் போட்டால், தயிர் எளிதில் புளிக்காது.
l தோசை மாவு அரைக்கும் போது, ஒரு கைப்பிடி அவல் சேர்த்து அரைத்தால், தோசை மொறு மொறுவென இருக்கும்.
l பிரியாணியில் உப்பு அதிகமானால், அதை சரிசெய்ய எலுமிச்சை சாற்றை பிளிந்து விடலாம்.
l பாகற்காய் குழம்பு வைக்கும் போது, ஒரு துண்டு கேரட்டை சேர்த்தால் குழம்பில் கசப்பு சுவை குறையும்.
l தாளிக்கும் போது கடுகு வெடித்து சிதறாமல் இருக்க, கடுகை முன்கூட்டியே வறுத்து எடுத்து கொள்ளவும்.
l அப்பளப் டப்பாவில் சிறிது பெருங்காய துண்டை வைத்தால், அவை நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
l இடியாப்பம் மாவில் கொஞ்சம் நெய் விட்டுப் பிசைந்தால் இடியாப்பம் மிருதுவாக இருக்கும்.
