♨ வாழைக்காய் வறுவல் செய்யும்போது மசாலாவில் சிறிதளவு சிக்கன் மசாலா சேர்த்தால் சுவையாக இருக்கும்.
♨ வாழைப்பூ துவையல் செய்யும்போது நெய் சேர்த்து தாளித்தால் சுவையாக இருக்கும்.
♨ பிரியாணி செய்யும்போது வெங்காயத்தை நன்றாக பொன்னிறமாக வதக்க வேண்டியது அவசியம்.
♨ பொரியல் செய்யும்போது காரப் பொடிக்கு பதிலாக தேங்காய் பொடி சேர்த்தால் சுவை அற்புதமாக இருக்கும்.
♨ ஊறுகாய் செய்யும்போது கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் ஊறுகாய் கெட்டுப் போகாமல் நீண்ட நாட்கள் இருக்கும்.
♨ காளான் வறுவல் செய்யும்போது மிளகுத்துாள் சேர்த்து செய்தால் சுவை கூடும்.
♨ பொரியலுக்கு தேங்காய் துருவல் போடுவதற்கு பதிலாக வறுத்த வேர்க்கடலையை அரைத்து சேர்க்கலாம்.
♨ மீனை வறுக்கும் முன் சிறிது மஞ்சள் துாள், உப்பு தடவி 10 நிமிஷம் வைத்தால் எண்ணெய் குறைவாக சிதறும்.
♨ சப்பாத்தி சூடாக இருக்க சில்வர் பேப்பரில் சுற்றி வைக்கலாம்.
♨ உருளைக்கிழங்கு குருமா செய்யும்போது பட்டை, சோம்பு, கிராம்பு அனைத்தையும் அரைத்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.
♨ தோசை மாவு புளித்து விட்டால் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய் துண்டுகள் சேர்த்து பணியாரமாக செய்தும் சாப்பிடலாம்.
- நமது நிருபர் -