கதைச் சுருக்கம்
@3br@@
----------------------------------------
குமுதம் சினிமா விமர்சனம்
மதுரை ஹேங் ஓவரில் எடுக்கப்பட்ட இன்னொரு படமோ என்ற யோசனையோடு தியேட்டருக்குள் போனால்... அட, படம் முழுக்க சின்னதாய், சுவாரஸ்யமாய் நிறைய ஆச்சரியங்கள்.
"தளபதி ரேஞ்சுக்கு கைகோர்த்துத் திரிகிற நாலு பாசக்காரப் பயல்களின் வாழ்க்கையில் ஒரு திடீர் பிரச்னை- அம்ரீஷ்பூரி மாதிரி வந்து பயம் காட்டும்போது என்ன செய்கிறார்கள் என்பதுதான் கதை.
விமலிடம் கொஞ்சம் குறும்பு, கொஞ்சம் பொறுப்பு என இயல்பான நடிப்பு . உள்ளூர் டி.வி.சேனல் தொகுப்பாளினியாக வரும் அஞ்சலி ஏமாறவில்லை. விபத்துக்குள்ளான நண்பனுக்கத் தன்னால் ரத்தம் கொடுக்க முடியாதபோது, விமல் அஞ்சலியை இழுத்து வருவது ரொமான்ஸை எல்லாம் தாண்டி மனதில் நிற்கிறது. வாய்பேச இயலாதவராக வருகிற நிஷாந்த், கர்ப்பிணி மனைவிக்காக எப்போதும் உருகுகிற பரணி, மின் மயான ஊழியராக வருகிற இயக்குநர் கௌரவ் ஆகிய மற்ற நண்பர்களும் வெளுத்துக் கட்டியிருக்கிறார்கள். நண்பர்களில் ஒருவரையே விமலுக்கு எதிராகக் காட்டிவிட்டு, அப்புறம் ஒவ்வொன்றாக அவிழும் சஸ்பென்ஸ் முடிச்சுகள் பளிச்.
விமல் கூடவே வருகிற அந்த அசிஸ்டெண்ட் பைன் "லைவ் ஆன காமெடியைத் தந்திருக்கிறான். கொலைக்குக் கொஞ்சமும் அஞ்சாத வில்லன் கேரக்டருக்கு பிரபல தியேட்டர் உரிமையாளர் சிதம்பரம் சில இடங்களில் ப்ளஸ். "கல்யாணம் கல்யாணம் ரீமிக்ஸ் பாடலில் இசையமைப்பாளர் சுந்தர்.சி. பாபுவை விட, ஒரிஜினலுக்குச் சொந்தக்காரரான சந்திரபாபுவே தெரிகிறார். தீப்பெட்டியில் குச்சி உரசுவதை எல்லாம் டைட் க்ளோஸப்பில் காட்டுவது கேமரா பூச்சாண்டி. மற்றபடி... கூட்டமும் கொண்டாட்டமும் கும்மியடிக்கிற மதுரை வாழ்க்கையை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய் உலகநாதன்.
நினைத்த நேரத்தில் எதிரிகள் மீது கார் ஏற்றிக் கொல்ல முடிகிற வில்லன், விமலைப் போட்டுத்தள்ள ஏன் இவ்வளவு சிரமப்படணும்? "பார் புகழும் காட்சிகள் படத்தில் எத்தனை என தனி போட்டியே வைக்கலாம். ஆரம்பத்தில் போதையில் தள்ளாடும் நண்பர்கள் மிக தாமதமாகத்தான் சீரியஸ் டிராக்குக்கு மாறுகிறார்கள்.
சினிமாத்தனமான கதையில் யதார்த்தமான கேரக்டர்களையும் சம்பவங்களையும் சாதுர்யமாக கலந்து கவனத்தை ஈர்த்துவிடுகிறார் அறிமுக இயக்குநர் கௌரவ்.
தூங்காநகரம் - சுறுசுறுப்பு...!
குமுதம் ரேட்டிங் -(ஓகே)














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!