கதைச் சுருக்கம்
----------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
ஹாலிவுட்டுக்குச் சவால் விடும் ஒரு பேய்ப் படம்!
வழக்கமான இளமை, கொஞ்சம் குறும்பு, காதல், ரொமான்ஸ், டூயட், இமேஜ் அத்தனையையும் தூக்கிக் கடாசிவிட்டு, ஒரு வயதுக் குழந்தைக்குத் தாயாக, கணவனைப் பிரிந்தவராக, பணக்கஷ்டத்தில் தவிக்கும் பெண்ணாக அற்புதமாக வாழ்ந்து காட்டியிரு்கும் நயன்தாராவுக்கு அந்தப் பல கோடி மதிப்புள்ள வைர மோதிரத்தைப் பரிசாகத் தூக்கிக் கொடுக்கலாம்!
ஒரு பேய்ப்படத்தை எடுத்துவிட்டு வாங்க ஆள் இல்லாமல் அவதிப்படுகிறார் ஓர் இயக்குநர். அந்தப் படத்தை பயமே இல்லாமல் தனியாகப் பார்த்தால் 5 லட்சம் ரூபாய் பரிசு என பப்ளிசிட்டிக்காக அறிவிக்கிறார். பணக்கஷ்டத்தில் பரிதவிக்கும் நயன்தாரா துணிச்சலாய் அந்தப் படத்தைப் பார்க்க வர, அதில் இரு்கும் பேய் எழுந்து வருகிறது. நயன்தாராவுக்கும் பேய்க்கும் என்ன சம்பந்தம்? யார் அந்தப் பேய்? நயன்தாராவை அது என்ன செய்யப் போகிறது? என்பதுதான் மாயா! இயக்க அஸ்வின் சரவணன்.
படத்தின் பெரும்பகுதி கறுப்பு வௌ்ளையிலும் மற்ற பகுதி அடர்த்தியான வண்ணத்திலுமாய் அமைந்து (யார் அந்த கேமராமேன் சத்யன் சூர்யன்) மேலும் மேலும் மெருகூட்டுகிறது. ரான் யோகனின் ஆர் ஆர் திகிலுடன் கை குலுக்குகிறது.
ஆரி ஓகே. தோழி லட்சுமி ப்ரியா டபுள் ஓகே.
படம் கற்பனை என்றாலும் மன நோயாளிகளைக் கொன்று புதைக்கும் காட்சிகள் சமீபத்திய உண்மை நிகழ்ச்சியை(?) நினைவுப்படுத்துகிறது.
மாயா - மனதில் நிற்கிறாள்!
குமுதம் ரேட்டிங் - நன்று























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!