கதைச் சுருக்கம்
அ நிறம் | அளவு
வழக்கம்போல படத்தின் ஆரம்பத்தில் படத்தைப் பற்றிய பில்ட் அப், வெட்டித் தடியர்களாக ஐந்து நண்பர்கள், டாஸ்மாக் கட்சிகள் என்று பழைய நெடி வீச்சமாய் அடிக்கிறது. பாதியிலேயே ஒருவர் செத்துப் போகிறார். ஒருவர் கனடா போய் அடிக்கடி போனில் மட்டும் பேசுகிறார். இன்னும் இரண்டு பேர் வில்லன்கள். மிச்சம் இருக்கும் பேர்வழி கதாநாயகன் என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள். பட்டப் பகலில் கொலையான பிணத்தைப் புதைப்பது, சரியாகக் கொலையாகாமல் கோணிப் பைக்குள் இருக்கும் உருவத்தை மண்டையில் பொடேர் என்று தாக்கிக் கொல்வது இவைதான் மிச்சமிருக்கும் கதாநாயகத் தம்பியின் குணாதிசயம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
படத்தின் முன்பகுதி சரியான ஜவ்வ்வ்வ்வு இழுவை. இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகளைக் கொண்டே முழுப்படத்தையும் சொல்லியிருக்க முடியும். சந்தர்ப்பம் தெரியாமல் பாடல்களை நுழைத்திருப்பது படத்தின் இன்னும் ஒரு மைனஸ் பாயின்ட்.
ஏறக்குறைய திரைப்படத்தின் அத்தனை காட்சிகளிலும் மதுக்கோப்பைகளுடன் கதாபாத்திரங்கள் வலம் வருவது பார்க்கவே அருவருப்பு. திராபையாக ஒரு நியூ இயர் கொண்டாட்டப் பாட்டு வேறு இம்சிக்கிறது. பாடல்களின் வரிகள் நினைவில் நிற்கவில்லை.
படத்தின் முன்பகுதி சரியான ஜவ்வ்வ்வ்வு இழுவை. இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகளைக் கொண்டே முழுப்படத்தையும் சொல்லியிருக்க முடியும். சந்தர்ப்பம் தெரியாமல் பாடல்களை நுழைத்திருப்பது படத்தின் இன்னும் ஒரு மைனஸ் பாயின்ட்.
ஏறக்குறைய திரைப்படத்தின் அத்தனை காட்சிகளிலும் மதுக்கோப்பைகளுடன் கதாபாத்திரங்கள் வலம் வருவது பார்க்கவே அருவருப்பு. திராபையாக ஒரு நியூ இயர் கொண்டாட்டப் பாட்டு வேறு இம்சிக்கிறது. பாடல்களின் வரிகள் நினைவில் நிற்கவில்லை.
மகாபலிபுரம்: மகாவலிபுரம்!
Advertisement
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!