கதைச் சுருக்கம்
------------------------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
விர்ச்சி சிவா ஆர்ப்பாட்டமில்லாமல் நகைச்சுவையை வெளிப்படுத்துவதில் பேர் பெற்றவர். ஆனால், இந்தப் படத்தில் கடைசி வரை அப்பாவியாகவே இருந்துவிட்டுப்போகிறார்.
தொலைக்காட்சியில் நிகழ்ச்சி லைவ் ஆக நடக்கும்போதே ஒருவர் சவால்விடுவதும், அதை இன்னொருவர் ஏற்பதும் முதலில் ஏதோ படத்தில் பார்த்த நினைவு வருகிறது. சரி! சவாலை ஏற்றதுதான் ஏற்றார்கள்... அதை சாதிக்கும்போது எதிர்கொள்ளும் பிரச்னையைப் படம் சொல்கிறதா என்றால் இல்லை.
மொத்தக் கதையில், கதை பண்ணும் பார்ட்டிகள் பாதி நேரத்தைப் பிடித்துக் கொள்கிறார்கள். மீதி நேரம் மிர்ச்சி சிவா, பாபி சின்ஹா, புதுமுகம் கௌரவ் ஆகிய மூவருக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து சிவாவின் பங்களிப்பு எவ்வளவு குறைவானது என்று யூகித்துக் கொள்ளலாம்.
படம்தானே என்கிறார்கள்; பரிட்சையா எழுதுகிறார்கள்? பின்னே படங்களுக்கு ஏன் மார்க் போடுகிறீர்கள்? என்று திரைப்பட விமர்சகர்களுக்கு கொட்டு வைக்கும் காட்சியும் உண்டு.
வெற்றிப் படம் தயாரிக்க என்னென்ன தேவை என்பதைப் பற்றி மிக நீண்ட விளக்கத்தை ஒரு தயாரிப்பாளர் படத்தில் அளிப்பதாக ஒரு காட்சி கடைசியில் இருக்கிறது. அதையாவது இந்தப் படநத்தில் பின்பற்றி இருக்கலாமே!
சிரிக்கவே சிரிக்காத பாபி சின்ஹா முதல் முறையாகப் புன்னகைக்கும்போது குண்டடிப் பட்டுச் சாகிறார். பாடல்கள் மனதில் நிற்கவில்லை.
மசாலா படம் - சாதா படம்.













வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.