கதைச் சுருக்கம்
சுதீர் பாபுவிற்கு இது ஒரு முக்கியமான படமே, மொத்த படத்தையும் தனி ஆளாக தாங்கி பிடிக்கிறார். அதும் மிக நேர்த்தியாக உணர்வுகளை வெளிப்படுத்தும் இடத்தில் கைதட்டலும் பெறுகிறார். படத்தில் வெவ்வேறு கால கட்டத்தில் காட்டப்படும் உயிரோட்டமான காதல் காட்சிகள் அழகு. படத்திற்கு வில்லன் இல்லாத குறையை அம்மா கதாபாத்திரத்தில் நடித்த பிரகதி நிறைவு செய்கிறார். கல்லூரி கால காதலை காட்சிபடுத்திய விதத்திற்கு நிச்சயம் இயக்குநரை பாராட்டியாக வேண்டும்.
படத்தின் பலவீனம் என்று பார்த்தால், தேவையில்லாமல் இரண்டு பாடல்கள் வந்து படத்திற்கு வேகத்தடை ஆகின்றன. அதுபோக இடைவேளைக்கு பிறகு திரைக்கதை சற்றே பாதை மாறிவிட்டும் பின்னர் க்ளைமேக்ஸ் நோக்கி நகர்கிறது.தொழில்நுட்பரீதியாக படத்தை எந்த குறையும் சொல்ல முடியாது. இயக்குனர் சந்த்ரு பொழுது போக்கு அம்சங்களை இரண்டாம் பாதியில் சேர்த்தது மட்டுமே படத்தின் பலவீனம்.
உங்களுக்கு காதல் கதை பிடிக்குமா, நிச்சயம் இதை நீங்கள் பார்க்கலாம் ரசிக்கலாம்
.
கிருஷ்ணம்மா களிபிண்டி இட்டரிணி - அழகிய காதல் கதை














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.