கதைச் சுருக்கம்
-------------------------------------------------------------------
கல்கி விமர்சனம்
விக்கிரமாதித்தன் காலத்தில் இருந்து சின்ன வாத்தியார் திரைப்படம் வரை, கூடு விட்டுக் கூடு பாய்வது என்பது வசீகரமான விஷயம் தான். சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு ஆனந்தவிகடன் இதழில், கூடு என்ற சிறுகதையில் கையாளப்பட்டிருக்கும் கருவும் இந்தப் படத்தின் கருவும் ஒத்துப் போவது எதேச்சையாகவும் இருக்கலாம்.
ஆய கலைகள் அறுபத்து நான்கையும் மக்கள் நலனுக்காக பழனியடிவாரத்தில் புதைத்து வைத்த சித்தர் போகர், இநதப் படத்தைப் பார்த்தால் நொந்து நூடுல்ஸ் ஆகிவிடுவார்.
விறுவிறுப்பாகப் போகவேண்டிய படத்தை இயன்றவரை குழப்பியிருக்கிறார்கள். வில்லனாகவும், நல்லவனாகவும் அரவிந்த் சாமியும், ஜெயம் ரவியும் இடம் மாறுவதுவரை சரிதான். அதன்பிறகு பலரது உடல்களில் பலரும் மாறிக் கொண்டே போகிறார்கள்.
படம் பார்த்து வெளியே வம்போது, வேறு யாராவது உடலில் நாம் இருக்கிறோமா என்றுகூடச் சந்தேகம் வந்துவிடுகிறது.
சர் நல்லவரா, கெட்டவரா என்பது படத்தின் இறுதிவரை தெரியவில்லை; அவ்வளவு ஏன்? நாசருக்கே தெரிந்திரக்குமா என்றும் புரியவில்லை. போகருக்கே வெளிச்சம்.
ஹன்சிகாவும், ஜெயம் ரவியும் பாடும் ஒர பாடல் காட்சி - ஜெயகாந்தன் ஒருமுறை சொன்னது போல - ஆடையுடுத்திய நீலப் படம்!
படத்தின் ஆரம்பத்தில் அ. சாமியின் சொகுசு வாழ்க்கையைச் சித்தரிப்பதாக நினைத்துக் கொண்டு கூட்டுக் கலவிக்காட்சி அருவெருப்பின் உச்சம்!
டம்மாலு டும்மீலு பாடல் ஏற்கெனவே பாப்புலர். நிச்சயம் 2 மாசமாவது ஒலித்துதான் ஓயும்.
அதே போலக் கூடு விட்டுக் கூடு பாஞ்சு பாடலும் வித்தியாசமான முறையில் படமாகியிருக்கிறது. பெண் குரல் ஓர் அமானுஷ்ய சூழலை உருவாக்குவது என்னவோ உண்மை.
பின் பாதி அநியாயத்துக்கு இழுவை கதாநாயகி மதுவருந்தும் தவிர்க்கப்பட வேண்டிய காட்சியும் உண்டு.
கைதட்டல் வாங்க வேண்டும் என்று எல்லாக் கதாநாயகர்களின் படத்தையும் காட்டுவது மலினமான உத்தி!
ஜேம்ஸ்பாண்ட் படங்களில், அவரின் பராக்கிரமங்களைக் காண்பிப்பதற்காக சம்பந்தமேயில்லாமல் ஒரு சாகச நிகழ்ச்சியோடு படத்தை ஆரம்பிப்பார்கள். இதிலும் ஆஃதே! ஆனாலும் மிக விறுவிறுப்பான ஆரம்பக் காட்சிக்கு ஒரு ஷொட்டு!
சிசி டிவி கேமிரா தொழில்நுட்பம் வந்தாலும் வந்தது. எல்லா படங்களிலும் திகட்டத் திகட்டக் காட்டுகிறார்கள். அதிலும் ரிவைண்ட் பண்ணு என்ற வசனம் கட்டாயம் இடம் பெறுவது வாடிக்கையாகிவிட்டது.
மொத்தத்தில் போகன் - அகோரன்!















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!