உப்பை குறைப்போம், அமைதியை கடைபிடிப்போம்… இன்று உலக உயர் ரத்த அழுத்த தினம்!

17-மே-2024

உயர் ரத்த அழுத்தத்தை தடுப்பது, முன்கூட்டியே கண்டறிந்து கட்டுப்படுத்துவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மே 17ல் உலக ரத்த அழுத்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

17-மே-2024

உலகில் 100 கோடி பேருக்கு மேல் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

17-மே-2024

உணவுப் பழக்கவழக்க மாற்றம், சிறுநீரகக் கோளாறு, மரபியல், உடல் பருமன், போல பல காரணங்களால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

17-மே-2024

வேலைப்பளு, கோபம், எரிச்சல், மன அழுத்தம், புகைப்பழக்கம் போன்றவையும் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.

17-மே-2024

ரத்த அழுத்தத்தால் சிறுநீரகம், கண், இதயம், நரம்பு மண்டலம் பாதிப்பு, தீடீர் மாரடைப்பு மற்றும் வாத நோய், சிறுநீரக செயலிழப்பு போன்றவை ஏற்படலாம்.

17-மே-2024

உணவில் உப்பை குறைவாக பயன்படுத்த வேண்டும். பேக்கரி பொருள்கள், சிப்ஸ், பேக்டு ஃபுட்ஸ் மற்றும் உப்பு அதிகமாக இருக்கும் ஊறுகாய் போன்ற உணவுப் பொருள்களை தவிர்க்க வேண்டும்.

17-மே-2024

தினமும் உணவுடன் பழங்கள், காய்கறிகள், கீரைகள், தானியங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

17-மே-2024

காலை, மாலை இருவேளைகளிலும் யோகா, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. குறைந்தது 20 நிமிடம் தியானம் செய்யலாம்.

17-மே-2024