கல்லீரல் பரிசோதனை யாருக்கெல்லாம் அவசியம்?

05-மார்-2025

முறையான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, நோய் தொந்தரவு இல்லாத ஆரோக்கியமான நபர் என்றால் 40 வயது வரை கல்லீரல் பற்றி கவலைப்படவோ பரிசோதனை செய்யவோ தேவையில்லை.

05-மார்-2025

40 வயதிற்கு மேல் வயதின் காரணமாக இயற்கையாகவே உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம்.

05-மார்-2025

உடல் செல்களில் மாற்றங்கள் ஏற்படலாம், செல்கள் வளராது. அந்த நேரத்தில் நமது உடலின் தேவையை கல்லீரல் தரமுடியாமல் போகும் போது சில நோய்கள் ஏற்படும்.

05-மார்-2025

மஞ்சள் காமாலை, கண்ணில் நிறம் மாறுதல், உடல் அரிப்பு, மலத்தின் நிறம் மாறுவது, சிறுநீர் நிறம் மாறுதல், கை, கால் வீக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் அது கல்லீரல் பாதிப்பின் அறிகுறி.

05-மார்-2025

அவர்கள் உடனே கல்லீரல் பரிசோதனை செய்ய வேண்டும். இதுதவிர கல்லீரலை பாதிக்கும் பழக்கவழக்கங்களை வைத்திருப்பவர்களும் பரிசோதனை செய்ய வேண்டும்.

05-மார்-2025

மது அருந்துபவர்கள், சர்க்கரை, கொழுப்புச்சத்து அதிகமுள்ளவர்கள் வருடம் ஒரு முறை பரிசோதிக்க வேண்டும்.

05-மார்-2025

மேலும் அடிக்கடி வைரஸ் தாக்குதல் உள்ளவர்கள், உடல்பருமன் உள்ளவர்கள் எந்த தொந்தரவும் தெரியவில்லை என்றாலும் கல்லீரல் பரிசோதனை செய்வது அவசியம்.

05-மார்-2025