இன்று மகாவீர் ஜெயந்தி!
எந்த பிராணியையும் கொல்லவோ, பிறர் கொல்வதை ஆமோதிப்பதோ, அதற்கு உடந்தையாக இருக்கவோ கூடாது. அனைத்து உயிர்களுக்கும் ஒரே மதிப்புதான் இருக்கிறது.
எப்போதும் நேர்மையுடன் இருங்கள். அதுதான் நல்வாழ்க்கையின் அஸ்திவாரம்.
பிறர் பொருளுக்கு ஒருபோதும் ஆசைப்படக்கூடாது. அதனால் சிறிதளவும் நன்மை ஏற்படாது.
அளவான உணவு, தேவையான உடை மற்றும் பொருட்களையே வைத்துக் கொள்ள வேண்டும். அத்தியாவசிய தேவை போக மீதியுள்ளதை தானம் செய்து விட வேண்டும்.
எப்போதும் உண்மையை மட்டுமே பேசுபவன், தாய் போல நம்பிக்கைக்கு உரியவனாகத் திகழ்வான்.
செய்த தவறை ஒத்துக்கொள்வதால் மனதில் சுமை குறைவதோடு, பால் போல தெளிவும் உண்டாகும்.
ஏமாற்றுதல் என்பது சிறிய முள் தான் என்றாலும், அதைப்பிடுங்கி எறிவது மிக கடினம்.
நல்ல நம்பிக்கை இல்லாமல் நல்லறிவு ஏற்படாது. நல்ல அறிவின்றி நல்ல ஒழுக்கமும் வாய்க்காது.