நீரின்றி அமையாது உலகு... உலக தண்ணீர் தினம் இன்று !

22-மார்-2025

அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ தண்ணீர் அவசியம். இது இயற்கை வளங்களில் ஒன்று.

22-மார்-2025

தண்ணீரை சேமித்தல், பாதுகாப்பான தண்ணீர் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 1993 முதல் மார்ச் 22ல் உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

22-மார்-2025

உலகில் மூன்றில் ஒருவர் பாதுகாப்பற்ற குடிநீரை பருகுகிறார். தண்ணீரை மிக சிக்கனமாக செலவழிக்க வேண்டும். அப்போது தான் எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீர் இருக்கும்.

22-மார்-2025

வரும் 2040ல் மின்சார தேவை 25 சதவீதம் அதிகரிக்கும். இதனால் தண்ணீரின் தேவையும் 50 சதவீதம் அதிகரிக்கும்.

22-மார்-2025

உலகில் 74 கோடி பேர் அத்தியாவசிய தேவைக்கான தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். போர்களில் இறப்பவர்களை விட பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமல் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.

22-மார்-2025

'பனிப்பாறை பாதுகாப்பு' என்பது இந்தாண்டின் மையக்கருத்து.

22-மார்-2025

உலகில் பனிப்பாறை உருகுவது அதிகரித்து வருவதால், வெப்பமயமாதல், குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட ஆபத்து உருவாகிறது. வெள்ளம், கடல் நீர்மட்ட உயர்வுக்கும் காரணமாகிறது.

22-மார்-2025

பூமியின் 70 சதவீத நன்னீர் பனிப்பாறையை சார்ந்தே உள்ளது.

22-மார்-2025