உயர் ரத்த அழுத்த தினம் இன்று... உப்பில் கவனம் தேவை !

17-மே-2025

உயர் ரத்த அழுத்தம் இதய பாதிப்புக்கு வழிவகுக்கிறது. இதை தடுப்பது, முன்கூட்டியே கண்டறிந்து கட்டுப்படுத்துவதை வலியுறுத்தி மே 17ல் உலக ரத்த அழுத்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

17-மே-2025

உலகில் 100 கோடி பேர் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சராசரி மனிதனின் ரத்த அழுத்தத்தின் அளவு 120/80. உடல் எடையைப் பொருத்து இது மாறுபடும்.

17-மே-2025

பொதுவாக 130/90 மேல் இருந்தால் உயர் ரத்த அழுத்தம். ஆனால் தற்போது 125/85 மேல் இருந்தாலே அறிகுறியாகக் கருதப்படுகிறது.

17-மே-2025

இது மரபு வழியாக வரலாம். சிறுநீரகக் கோளாறு. நாளமுள்ள சுரப்பிகள் மூலம் சிறுவயதில் ரத்த அழுத்தம் வரலாம். உடல் பருமன், மன அழுத்தம் அதிகமாக இருந்தாலும் வர வாய்ப்புள்ளது.

17-மே-2025

குறிப்பாக, உடலிலுள்ள உப்புச்சத்து காரணமாக ரத்த அழுத்தம் மாறுபடும். தினமும் எடுத்துக் கொள்ளும் உணவில் சுமார் 20 கிராம் உப்பு சேர்க்கிறோம். அது தவறானதாகும்; குறைக்க வேண்டும்.

17-மே-2025

ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உடல் எடையைக் குறைப்பது அவசியம். உணவில் உப்பின் அளவை குறைப்பது நல்லது.

17-மே-2025

பழங்கள், காய்கறிகள், கீரைகள், நவதானியங்கள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். காலை, மாலை இருவேளைகளிலும் யோகா, உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்துக்கு உகந்தது.

17-மே-2025

ரத்த அழுத்தத்தால் சிறுநீரகம், கண், இதயம், நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். தீடீர் இதய அடைப்பு, வாத நோய், சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம். எனவே ரத்த அழுத்தத்தைச் சீராக வைப்பது அவசியமானது.

17-மே-2025