கற்க கசடற! பரிட்சையை கண்டு மாணவர்களே பதற வேண்டாம்!

19-பிப்-2025

மாணவர்கள் தேர்வு முடிவு பற்றியோ, இல்லை தனது கனவுகள் நிறைவேறுமா என அதிகமாக சிந்தித்து கவலைப்படுவதினால் மன அழுத்தம் உண்டாகிறது.

19-பிப்-2025

மனநிலை திடமாக இருக்க வேண்டும். படிப்பதற்கு முன்னர் நம்மிடம் உள்ள எதிர்மறை எண்ணங்களைத் துரத்திவிட வேண்டும்.

19-பிப்-2025

தேர்வு பயம், மனநெருக்கடி, கவனச்சிதறல்கள், தாழ்வு மனப்பான்மை, அதீத நம்பிக்கை, படிக்கும் திட்டம் இல்லாமை போன்ற விஷயங்கள் நம்மை அண்டவிடக்கூடாது.

19-பிப்-2025

ஒவ்வொரு நாளும் எந்த நேரத்தில் படிப்பது, எத்தனை மணிநேரம் படிப்பது என்று முடிவு செய்வது இன்னும் பலனளிக்கும்.

19-பிப்-2025

மாதாந்திர தேர்வுகளின்போது நீங்கள் தவற விட்ட கேள்விகளை முதலில் தெளிவாக படித்துக்கொள்ளுங்கள்.

19-பிப்-2025

45 நிமிடத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து படிக்காமல், சிறிது நேரம் இடைவெளி எடுத்து படித்தால் கவனம் நன்றாக இருக்கும்.

19-பிப்-2025

5 அல்லது 10 நிமிடம் நடை பயிற்சி அல்லது இயற்கைச் சூழ்நிலையில் செல்லுதல் போன்ற வழக்கங்களை மேற்கொள்ளலாம்.

19-பிப்-2025

உடல்ரீதியாக, தேர்வுக்கு முன்புவரை உள்ள காலங்களில் அளவான தூக்கம் (6-8 மணி நேரம்), ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மிகவும் அவசியம்.

19-பிப்-2025