ராமர் கோவிலில் குவியும் தென்கொரிய பக்தர்கள் !

31-ஜன-2024

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலை பார்ப்பதற்காக, நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தினமும் வருகின்றனர்.

31-ஜன-2024

இந்நிலையில், கிழக்காசிய நாடான தென் கொரியாவைச் சேர்ந்தவர்கள் கும்பல் கும்பலாக வருகின்றனர். அயோத்தியை, தங்களுடைய தாய்வழி ஊராக இவர்கள் பார்க்கின்றனர்.

31-ஜன-2024

சில வரலாற்று ஆவணங்கள், தகவல்களின் படி, 2,000 ஆண்டுகளுக்கு முன், அயோத்தியைச் சேர்ந்த, 16 வயது இளவரசி சுரிரத்னா, கடல் பயணம் மூலம் கொரியாவுக்கு சென்றுள்ளார்.

31-ஜன-2024

அங்கு, கொரிய அரசர் கிம் சுரோவை திருமணம் செய்தார். ராணியான சுரிரத்னாவுக்கு, ராணி ஹியோ ஹேவான்காக் என்று பெயரிடப்பட்டது.

31-ஜன-2024

இவர், 12 குழந்தைகளை பெற்றெடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கரக் என்ற இந்த அரச குடும்பத்தைச் சேர்ந்த, 60 லட்சம் பேர் தற்போது தென்கொரியாவில் உள்ளனர்.

31-ஜன-2024

கடந்த, 2015ல் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தென் கொரிய முன்னாள் அதிபர் மூன் ஜேயின் இடையே ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

31-ஜன-2024

இதன்படி, அயோத்தி சரயு நதிக்கரையில் உள்ள சுரிரத்னாவின் நினைவிடத்தை அழகுபடுத்தும் பணிகள் துவங்கின. கடந்த, 2018ல் இதை, தென்கொரிய அதிபரின் மனைவி கிம் ஜங்க்சோக் திறந்து வைத்தார்.

31-ஜன-2024

தொடர்ந்து, கரக் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஒவ்வொரு ஆண்டும், அயோத்திக்கு வரும் நிலையில், தாய் வழி ஊரில் கட்டப்பட்ட ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நேரலையில் பார்த்து மகிழ்ந்தனர்.

31-ஜன-2024

இதைத் தொடர்ந்து, ராமர் கோவிலை நேரில் பார்ப்பதற்காக, குழுக்களாக வரத் துவங்கியுள்ளனர் தென்கொரிய பக்தர்கள்.

31-ஜன-2024