அமைதியே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கைகொடுக்கும்... இன்று உலக அமைதி தினம்

21-செப்-2025

இரண்டாம் உலகப்போரின் உச்சகட்டத்தில் ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டுகள் போடப்பட்டு பேரழிவைச் சந்தித்த போதுதான் அமைதியின் தேவையை, நிதர்சனத்தை ஜப்பான் உணர்ந்தது.

21-செப்-2025

மற்ற உலகநாடுகளும் உணர்ந்தன. இதன் விளைவாக 1945 அக்டோபரில் உலக அரசுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா.சபை அமெரிக்க மண்ணில் உருவாக்கப்பட்டது.

21-செப்-2025

நாடுகளிடையே போர், வன்முறை ஏற்படுவதை தடுப்பது, அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் ஐ.நா., சார்பில் செப்., 21ல் உலக அமைதி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

21-செப்-2025

'அமைதியான உலகிற்காக தற்போதே செயல்படுதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

21-செப்-2025

உலக நாடுகளிடையே போர், வன்முறை ஏற்படுவதை தடுத்து சண்டை சச்சரவுகளை தீர்த்து, உலகில் அமைதியை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.

21-செப்-2025

வறுமை, கல்வியின்மை, பாலியல் வன்முறைகள், சர்வாதிகாரம், லஞ்சம், விழிப்புணர்வின்மை போன்றவற்றிலிருந்து விடுபடுவது தான் மக்களுக்கு அவசியம்.

21-செப்-2025

அமைதியான, ஏற்றத்தாழ்வில்லாத உலகைப் படைத்திட இந்த உலக அமைதி தினத்தில் உறுதியேற்போம்.

21-செப்-2025