காஞ்சிப்பெரியவரின் கனிவான சிந்தனைகள்...

24-மார்-2025

அமைதியாக கடமையில் ஈடுபடுங்கள். எதற்காகவும் கோபம் கொள்ளத் தேவையில்லை. உலகில் எல்லாம் நன்மைக்காகவே நடக்கிறது.

24-மார்-2025

மற்றவர் குறைகளை அன்பால் திருத்த முயலுங்கள். அடக்குமுறையால் நிலையான பயன் உண்டாவதில்லை.

24-மார்-2025

நல்லவன் ஒருவன் இருந்தால் அவன் குடும்பத்திற்கு மட்டுமில்லாமல் ஊரார் அனைவருக்கும் நன்மை உண்டாகும்.

24-மார்-2025

வாழ்வில் குறுக்கிடும் கஷ்டத்தை எண்ணிக் கலங்க வேண்டாம். சகிப்புத் தன்மையுடன் பொறுத்துக் கொள்ளுங்கள்.

24-மார்-2025

தேவையை அதிகரித்துக் கொண்டே போகாமல், முடிந்த அளவிற்கு எளிமையுடன் இருக்கப் பழகுங்கள்.

24-மார்-2025

போட்டி மனப்பான்மை இருக்கும் வரை, மனித வாழ்வில் நிறைவு ஏற்படாது.

24-மார்-2025

பணம், பேச்சு எதுவாக இருந்தாலும் அளவு மீறக்கூடாது. நாளடைவில் செயலிலும் கணக்காக இருக்கும் பழக்கம் வந்து விடும்.

24-மார்-2025