இன்று உலக மூல நோய் தினம்! தீர்வுகள் சில!!

20-நவ்-2024

மூலம் நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நவ. 20ல் உலக மூல நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

20-நவ்-2024

மூல நோய் என்பது ஆசனவாயின் உள்ளேயும் அதைச் சுற்றியும் ஏற்படும் கட்டிகள். குறிப்பாக ஆசனவாயில் உள்ள நரம்புகளில் அழுத்தம் அடைந்து மூல நோயை ஏற்படுத்துகிறது

20-நவ்-2024

உடல் பருமன், மரபியல் பிரச்னை, கர்ப்பக்காலம், அதிக சூடு, அதிக நேரம் உட்கார்ந்திருத்தல், போன்ற பல்வேறு காரணங்களால் மூலநோய் ஏற்படலாம்.

20-நவ்-2024

மூல நோயை கவனிக்காமல் விட்டுவிட்டால் பாதிப்பு அதிகமாகி, அறுவைசிகிச்சை செய்யும் அளவுக்குக் கொண்டு போய்விடும். உணவு பழக்கம், வாழ்க்கை முறை மாற்றத்தால் அதை சீராக்க முடியும்.

20-நவ்-2024

காய்கறி, பழங்கள், கீரைகளை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். கார உணவுகளை தவிர்க்க வேண்டும்.

20-நவ்-2024

நேரம் தவறி உணவு உட்கொள்ளுதல், தூக்கமின்மை போன்ற பழக்கம் இருந்தால் அவற்றை மாற்றிக்கொள்ள வேண்டும்.

20-நவ்-2024

மைதா உணவு பொருட்கள், எண்ணெயில் பொறித்த உணவுப் பொருட்கள் போன்றவற்றால் மலச்சிக்கல் ஏற்படும். அதனால் அவற்றை தவிர்க்கவும்.

20-நவ்-2024