சளி, வறட்டு இருமலுடன் மர்ம காய்ச்சல் வேகமாக பரவுது...

31-ஆக்-2025

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சளி, வறட்டு இருமலுடன் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

31-ஆக்-2025

சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர்.

31-ஆக்-2025

இரவில் கன மழை, பகலில் வெயில் என, தட்ப வெப்ப நிலை மாறி நிலவுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

31-ஆக்-2025

உடல் சோர்வு, மாலைநேர குளிர், வறட்டு இருமல், சளியுடன் காய்ச்சல் பரவி வருகிறது. மருத்துவ சிகிச்சையிலும் பெரிதாக குணமாவதில்லை என டாக்டர்கள் கூறுகின்றனர்.

31-ஆக்-2025

சிலருக்கு இரண்டு வாரங்களுக்கு மேல் உடல் வலி, தொண்டை வலி பாதிப்பு தொடர்பவதால், மர்ம காய்ச்சல் பரவுகிறதோ என்ற அச்சம் மக்களிடம் எழுந்துள்ளது.

31-ஆக்-2025

இதில், நடுத்தர வயதினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இவ்வகை பாதிப்புகள், டெங்கு, டைப்பாய்டு, மலேரியா உள்ளிட்ட பாதிப்புகளாக இருக்கலாம் என, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

31-ஆக்-2025

இக்காலக்கட்டத்தில் வீட்டில் குழந்தைகள், பெரியவர்கள் இருந்தால் கட்டாயம் கொதிக்க வைத்த நீரை பருக வேண்டும்.

31-ஆக்-2025

இந்த சமயத்தில் நார்சத்து, விட்டமின் ஏ, சி கொண்ட பழங்கள், கிரீன் டீ, காய்கறி சூப் , இஞ்சி டீ போன்ற சுடு பானங்களை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.

31-ஆக்-2025