இதய தமனிகளை தாக்கும் கவசாகி!

27-ஆக்-2024

குழந்தைகளை தாக்கும் நோய்களில், 'ருமட்டாய் ஆர்த்ரைடீஸ்' முதலிடத்திலும், 'கவசாகி' நோய் அடுத்த இடத்திலும் உள்ளது. இந்நோயை உறுதிசெய்ய எவ்வித பரிசோதனைகளும் இல்லை. அறிகுறிகளை வைத்தே சிகிச்சை தரப்படும்.

27-ஆக்-2024

கவசாகி நோய் என்பது சிறிய, நடுத்தர அளவுடைய ரத்தக் குழாய்களில் அழற்சியை ஏற்படுத்தும்.

27-ஆக்-2024

சில சமயங்களில் நிணநீர் குழாய்கள், வாய், மூக்கு, தொண்டையில் உள்ள பிசுபிசுப்பான மியூக்கஸ் அடுக்கிலும் வீக்கத்தை ஏற்படுத்தலாம். கைக்குழந்தைகள், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிக்கும்.

27-ஆக்-2024

கவசாகி நோய்க்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆட்டோ இம்யூன் டிசாடர் எனப்படும் நம் நோய் எதிர்ப்பு சக்தியால் உண்டாகும் பிரச்னையாக இருக்கலாம்.

27-ஆக்-2024

கவசாகி நோய் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், தொண்டைப்புண் என்று நினைத்து, பல்வேறு ஆன்டிபயாடிக் மருந்துகள், தட்டம்மைக்கான சிகிச்சைகள் தரப்படுகிறது.

27-ஆக்-2024

கவசாகி நோய் உறுதியான 10 நாட்களுக்குள், 'ஐவிஜி' எனப்படும் 'இம்யூனோ குளோபலின்' என்ற உயிரி மருந்தை நரம்பு வழியாக செலுத்தினால், இதயத் தமனியில் எற்படும் பாதிப்புகளை தடுக்கலாம்.

27-ஆக்-2024

இதயத் தமனிகளில் பாதிப்பை உறுதி செய்ய எக்கோ பரிசோதனை செய்யலாம். இயல்பாக இருந்தால், இரண்டாவது வாரத்தில் ஒருமுறையும், ஆறு - எட்டு வாரத்தில் ஒருமுறையும் எக்கோ பரிசோதனை அவசியம்.

27-ஆக்-2024

கவசாகி நோயை ஆரம்ப அறிகுறிகள் வாயிலாக கண்டறிந்து, சிகிச்சை செய்தால், இதயத் தமனியில் அழற்சி போன்ற தீவிர பாதிப்புகளை தடுக்க முடியும்.

27-ஆக்-2024