மரப்பலகைகளில் காய்கறி வெட்டுகிறீர்களா?

08-ஜூன்-2025

சில ஆண்டு காலமாக காய்கறிகள் மற்றும் பழங்களை வெட்ட, பிளாஸ்டிக் வெட்டுப் பலகைகளை பயன்படுத்துகின்றனர், பெரும்பாலானோர்.

08-ஜூன்-2025

அதில் ஏற்படும் தீமைகளை அறிந்து, பலரும் அதை தவிர்த்து, மரப் பலகைகளுக்கு மாறி வருகின்றனர். இவ்வாறு மாறியவர்களுக்கு, அதிர்ச்சி தரும் விஷயம் இது.

08-ஜூன்-2025

காய்கறி வெட்டுவதற்குப் பயன்படுத்தும் மரப்பலகை கூட, பாதுகாப்பானது இல்லை என மருத்துவ உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

08-ஜூன்-2025

மரம், அதன் இயல்பிலேயே நுண்துளைகள் கொண்டது. அதாவது, அதன் மீது வைத்து வெட்டிய காய்கறிகளிலிருந்து, அது ஈரப்பதத்தை எளிதில் உறிஞ்சி விடும்.

08-ஜூன்-2025

தக்காளிச் சாறு, பச்சை மாமிச துண்டுகள், இஞ்சி மற்றும் பூண்டு போன்றவை, மரப்பலகையால் எளிதில் உறிஞ்சப்படுகின்றன.

08-ஜூன்-2025

இந்த ஈரப்பதம், பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற நுண்கிருமிகள் செழித்து வளர அனுமதிக்கிறது.

08-ஜூன்-2025

காலப்போக்கில், இந்த மரப் பலகைகள், கீறல் விட ஆரம்பிக்கின்றன. இந்தச் சிறிய விரிசல்களை முழுவதுமாக சுத்தம் செய்வது கடினமானது.

08-ஜூன்-2025

மேலும், சால்மோனெல்லா, ஈகோலி போன்ற, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், இதில் வளர ஆரம்பிக்கின்றன. இவை நாம் சமைக்கும் உணவை மாசுபடுத்தி பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

08-ஜூன்-2025

நாட்கள் செல்லச் செல்ல, இந்த பலகைகளின் சிறு துண்டுகள் உதிர ஆரம்பிக்கும். இந்த துகள்களை உட்கொள்வது, வயிற்று ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்றும் கூறப்படுகிறது.

08-ஜூன்-2025