பெருங்காயமே கொஞ்சம் பொய்யடா! கலப்படத்தை கண்டுபிடிக்க முடியுமா?

03-ஜூலை-2024

உணவிலும், நாட்டு வைத்தியத்திலும் பயன்படுத்தப்படும் பெருங்காயத்தில், கலப்படம் அதிகமாக உள்ளது. நல்ல, தரமான பெருங்காயம் வெளிறிய மஞ்சள் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

03-ஜூலை-2024

சுவை, நறுமணத்துக்காக உணவில் சேர்க்கப்படும் பெருங்காயம், வாயுத்தொல்லையை போக்குவதற்கு பயனுள்ளதாக இருக்கிறது. அதை வீட்டிலேயே எளிய பரிசோதனை வாயிலாக கண்டுபிடித்து விடலாம்.

03-ஜூலை-2024

இயற்கை வைத்திய முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் பெருங்காயம், ஈரான், ஆப்கன் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

03-ஜூலை-2024

விலை அதிகம் என்பதால், இதில் மரப்பிசின், பெருங்காய கழிவுகள், கற்கள், சாயம், மைதா மாவு போன்றவற்றை கலப்படம் செய்து விற்கின்றனர். அதனால், மூக்கைத் துளைக்கும் வாசம் வந்தாலும், கவனமாகப் பார்த்துத்தான் வாங்க வேண்டும்.

03-ஜூலை-2024

சிறிதளவு பெருங்காயத்தை ஒரு ஸ்பூனில் எடுத்துக் கொள்ளுங்கள். கலப்படம் இல்லாத பெருங்காயம் கற்பூரம் மாதிரி எரிய வேண்டும். பிசின் கலப்படம் செய்யப்பட்ட பெருங்காயம், அப்படி சுடர் விட்டு எரியாது.

03-ஜூலை-2024

சிறிதளவு பெருங்காயத்தை, பவுடர் செய்து ஒரு கண்ணாடி டம்ளரில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு, நன்றாக கலக்கவும். பெருங்காய பவுடர் நன்கு கரைந்து, பால் போன்ற வெண்மையான திரவம் வந்தால், சுத்தமான பெருங்காயம் என்று அர்த்தம்.

03-ஜூலை-2024

பெருங்காயத்தை தண்ணீரில் ஊற வைக்கும்போது, வேறு நிறம் வந்தால், சாயம் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக அர்த்தம். இதன் மூலம் கலப்படத்தை கண்டுபிடிக்கலாம்.

03-ஜூலை-2024

பெருங்காயத்தின் மணம் எளிதில் போய்விடும் என்பதால், காற்றுப் புகாத கண்ணாடிக் குவளையில் போட்டுவைத்திருந்தால் அதன் மணத்தையும் மருத்துவக் குணத்தையும் பாதுகாக்கலாம்.

03-ஜூலை-2024