கிறிஸ்துமஸ் கேக் வரலாறு...

25-டிச-2024

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டம் என்றாலே, கேக் உணவு பிரதானம். அது உருவான வரலாறை பார்ப்போம்...

25-டிச-2024

மாவு கலவையால் செய்யப்பட்ட உணவை ஐரோப்பியர், 'கேகே' என்பர்; இந்த சொல்லில் இருந்து, 'கேக்' தோன்றியது. கிரேக்கர்கள், 'பிளேகஸ்' என்றனர். அதற்கு தட்டை வடிவ மாவுபொருள் என அர்த்தம்.

25-டிச-2024

மென்மையாக அரைக்கப்பட்ட, கோதுமை மாவில் தயாரிக்கப்படுகிறது, கேக். பழங்காலத்தில் செல்வந்தர் வீடுகளில் மட்டுமே செய்யப்பட்டது. பண்டிகை காலத்தில் மிகவும் முக்கியத்துவம் பெற்றது.

25-டிச-2024

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி நடக்கும் உபவாச நிகழ்வின் போது, எளிதில் ஜீரணமாகும் உணவான ஓட்ஸ் தானிய கஞ்சியை தயாரித்து வழங்கும் வழக்கம் இருந்தது.

25-டிச-2024

அந்த கஞ்சியில், உலர் திராட்சை, முந்திரி போன்ற சுவைமிகு பொருட்களை சேர்த்தனர். பின் அதற்கு பதிலாக, கோதுமை மாவு, வெண்ணெய் மற்றும் முட்டை கலந்து உணவு செய்யும் வழக்கம் உருவானது.

25-டிச-2024

இதை பொது நிகழ்வுகளில் பரிமாறும் வழக்கம், 16ம் நுாற்றாண்டில் துவங்கியது. செல்வந்தர்கள் வீட்டில், ஆரஞ்சு, திராட்சை, பாதாம் பயன்படுத்தி சிறப்பு கேக் செய்தனர்.

25-டிச-2024

கிறிஸ்துமஸ் என்றாலே, பழங்களால் தயாரிக்கும், 'ப்ளம் கேக்' தான் பிரபலம்; பண்டிகைக்கு முன், உலர்ந்த பழங்களை, ஒயினுடன் கலந்து, காற்று புகாமல், நொதிக்க வைத்து, கேக் செய்யப்பட்டது.

25-டிச-2024