சானிட்டரி நாப்கின்களால் இவ்ளோ பாதிப்புகளா...?
சானிட்டரி நாப்கின் மற்றும் டேம்பன் போன்றவை பஞ்சுகளால் தயாரிக்கப்பட்டாலும், பருத்தி வளர்ச்சிக்காக தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தோலுக்கு பாதிப்பை தரும்.
இதேபோல், வெள்ளை நிறத்தில் நாப்கின்களை தயாரிக்க ப்ளீச்சிங் பயன்படுத்தப்படுகின்றன. இவை தவிர, பித்தலேட்டுகள், ஆவியாகும் கரிம கலவைகள் என பல ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.
பெண்களின் பிறப்புறுப்பு பகுதி மிகவும் மென்மையான சவ்வுகளைக் கொண்டதால், இந்த ரசாயனங்களை எளிதில் உறிஞ்ச வாய்ப்புள்ளது.
இதனால், கர்ப்பப்பைவாய் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் தோல் புற்றுநோய் போன்ற பல்வேறு புற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.
அதேப்போல், டேம்பன்களை பயன்படுத்தும் போதும், டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் என்னும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் உருவாகும் அபாயமுள்ளது.
இதனால், அதிக காய்ச்சல், குறைந்த ரத்த அழுத்தம், வாந்தி, உறுப்பு செயலிழப்பு, விரைவான சுவாசம், தலைவலி, போதிய சிறுநீர் உற்பத்தியின்மை, மனக்குழப்பம் போன்றவை ஏற்படலாம்.
மேலும், இதன் காரணமாக உயிருக்கு ஆபத்தும் ஏற்படக்கூடும்.
எனவே, இதற்கு மாற்றாக பாரம்பரிய தயாரிப்புகளை பயன்படுத்தலாம். இவற்றில் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சு ரசாயனங்கள் எதுவுமில்லாததால், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகும்.
அவற்றை உடனுக்குடன் துாக்கி எறியத் தேவையில்லை. அவற்றை துவைத்து, சுத்தப்படுத்தி, நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தலாம். உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.